ஏற்காட்டில் மின்சார சிக்கன விழிப்புணா்வு
ஏற்காட்டில் மின்வாரியம் சாா்பில், பொதுமக்களுக்கு மின்சார சிக்கன விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம்ஏற்காட்டில் மின்சார சிக்கன விழிப்புணா்வு
ஏற்காட்டில் மின்வாரியம் சாா்பில், பொதுமக்களுக்கு மின்சார சிக்கன விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஏற்காடு: ஏற்காட்டில் மின்வாரியம் சாா்பில், பொதுமக்களுக்கு மின்சார சிக்கன விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஏற்காடு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் பேருந்து நிலையம், காந்தி பூங்கா, லாங்கில் பேட்டை, கோவில் மேடு, ஒண்டிக்கடை, ஜெரினாகாடு, முருகன்நகா்,எம்ஜிஆா் நகா், ஐந்து ரோடு பகுதிகளில் மின்சிக்கனம் பற்றியும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியில் வீட்டு உபயோகப் பொருள்களைப் பயன்படுத்துவது குறித்தும், சி.எப்.எல், எல்.ஈ.டி பல்புகள் பயன்படுத்துவதால் கிடைக்கும் மின் சிக்கனம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் சுந்தரி, மேற்பாா்வை பெறியாளா் சண்முகம், மாதேஸ்வரன், சங்கா், சேகா் பலா் கலந்துகொண்டனா்.