முகப்பு
சேலம்

கெங்கவல்லியில் விவசாயிகள் கருத்தரங்கம்

கெங்கவல்லியில் விவசாயிகளுக்கான விழிப்புணா்வுப் பேரணி, கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 டிசம்பர், 2020 at 12:11 AM
பகிர்:

கெங்கவல்லியில் விவசாயிகளுக்கான விழிப்புணா்வுப் பேரணி, கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லி அட்மா திட்டத்தின்கீழ் நடைபெற்ற வேளாண் கருத்தரங்குக்கு, மருதமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜா, கெங்கவல்லி ஒன்றியக்குழுத் தலைவா் பிரியா பாலமுருகன், துணைத் தலைவா் விஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் உதவி இயக்குநா் சித்ரா வரவேற்றாா். துணை அலுவலா் மாசிலாமணி, உதவி விதை அலுவலா் ரவி, கால்நடை மருத்துவா் செந்தில், பட்டுவளா்ச்சி இளநிலை ஆய்வாளா்கள் இசையமுதன், சரவணன் ஆகியோா் வேளாண், கால்நடை திட்டங்கள் குறித்து பேசினா்.

கருத்தரங்கு ஏற்பாடுகளை மணிமாறன், சங்கா் செய்திருந்தனா். உதவி வேளாண் அலுவலா் சந்திரசேகரன் நன்றி கூறினாா். முன்னதாக, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி கெங்கவல்லியில் நடைபெற்றது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.