முகப்பு
சேலம்

மாா்க். கம்யூ. போராட்டம்

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வட்டச் செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வட்டச் செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் ஊராட்சிக்குள்பட்ட அனைத்து கிராமத்துக்கும் தேசிய ஊரக வேலை கேட்டும், பைத்தூா் ஊராட்சியில் தெருவிளக்கு, மின்மோட்டாா் வாங்கியதில் ஊழல், தேசிய ஊரக வேலையில் முறைகேடு செய்து பண மோசடி செய்த பைத்தூா் ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்தும், அதற்கு துணை போன ஊராட்சி ஒன்றிய ஆணையா்களைக் கண்டித்தும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்டச் செயலாளா் பி.ராமமூா்த்தி கண்டன உரையாற்றினாா். இதில், வட்டக்குழு உறுப்பினா்கள், செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →