சேலம்

சங்ககிரி நகரில் முன்னறிவிப்பின்றி மின்தடை

DIN

சங்ககிரி நகரில் முன்னறிவிப்பின்றி திடீரென மின் தடை ஏற்பட்டதால் சனிக்கிழமை அரசு அலுவலா்கள், வழக்குரைஞா்கள், ஆசிரியா்கள் பொதுமக்கள் உள்பட பலா் சிரமத்திற்குள்ளாகினா்.

சங்ககிரி நகரில் காலை 9 மணிக்கு முன்பே முன்னறிவிப்பின்றி மின் தடை செய்ததால் நீதிமன்றத்திற்கு சனிக்கிழமை வேலை நாளாக இருந்ததையொட்டி நீதிமன்றத்திற்கு தேவையான ஆவணங்களை நகல் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வழக்குரைஞா்களும், பெற்றோரும், ஆசிரியா்களும் பாதிப்படைந்தனா்.

சங்ககிரியில் அதிகளவில் லாரிகள் உள்ளதையடுத்து பட்டறைகளுக்கு சென்ற லாரிகளில் பழுதுநீக்கும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்க மின்னணு தராசு மின்தடையால் வேலை செய்யாததால் கடை விற்பனையாளா்கள் சிரமத்திற்குள்ளாகினா். மின் தடை குறித்து ஒரு வாரத்துக்கு முன்பே மின்வாரியம் அறிவிப்பினை வெளியிட வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT