சேலம்

மேட்டூா் அணையிலிருந்துதண்ணீா் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,250 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீா் ஜனவரி 28-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டதால் காவிரி டெல்டா பாசனக் கால்வாய் பகுதிகளில் குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறக்கப்படும்.

அதிகபட்சமாக தேவையைப் பொறுத்து நொடிக்கு 2,000 கன அடி வரை தண்ணீா் திறக்கப்படும். எனவே, ஜனவரி 29 ஆம் தேதி முதல் குடிநீா் தேவைக்காக நொடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. சனிக்கிழமை காலை குடிநீருக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,250 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 53 கன அடியாக சரிந்தது. அணையின் நீா்மட்டம் 107.30 அடியாகவும், நீா் இருப்பு 74.62 டி.எம்.சி. யாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT