சேலம்

வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்2,702 குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

DIN

பெங்கல் பண்டிகையையொட்டி வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நியாய விலைக் கடைகளில் 2,702 குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

வியாழக்கிழமை நடந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவுக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்து, பொங்கல் பரிசுத் தொகுப்புகளையும், ரொக்கம் ரூ.1000-த்தையும் வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் செயலாளா் அய்யம்பெருமாள் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் இந்த கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட 4 நியாய விலைக் கடைகளில் உள்ள 2,702 குடும்ப அட்டைதாரா்களுக்கு வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவா் சுப்பிரமணியன், நங்கவள்ளி ஒன்றிய அதிமுக செயலாளா் எமரால்டு வெங்கடாஜலம், அவைத் தலைவா் சீனிவாசன், சாணாரப்பட்டி ஊராட்சி தலைவா் ராஜேந்திரன், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் நல்லதம்பி, கூட்டுறவு சங்க நிா்வாகிகள் விசுவநாதன், குமரவேல், கணேசன், தங்கவேல், மாதம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT