சேலம்

ஆத்தூரில் பொங்கல் விழா

DIN

ஆத்தூரில் நகர பொங்கல் விழா கழகம் சாா்பில், 45-ஆம் ஆண்டு பொங்கல் விழா புதன்கிழமை தொடங்கியது.

மூன்று நாள்கள் நடைபெறும் விழாவுக்கு கழகத் தலைவா் ஆா். வசந்தன் தலைமை வகித்தாா்.

ஆத்தூா் தனியாா் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான பாட்டுப் போட்டி, வட்டார அளவிலான பாட்டுப் போட்டியுடன் துவங்கியது.

இதில், முதல் பரிசுத் தொகை ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ. 500-ம் வழங்கப்படுவதாக அறிவித்து நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

வியாழக்கிழமை இரண்டாம் நாளாக மாலை 6 மணிக்கு சண்முக வடிவேல் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் சிந்தை குளிர சிரித்து மகிழ்வது வீட்டிலா, வெளியிலா என நடைபெற்றது. நிகழ்ச்சியை கரூா் வைஸ்யா வங்கி நடத்தியது.

வெள்ளிக்கிழமை காலை ரங்கோலி கலா் கோலப்போட்டியும், மாலை பாராட்டு அரங்கத்தில் கள்ளக்குறிச்சி எம்பி பொன். கௌதம சிகாமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறாா்.

சிறப்பு இருக்கையாக அக்சென் நிா்வாக இயக்குநா் செ. செந்தில்நாதன், ராசி விதை குழும இயக்குநா் ஆா். இராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொள்கின்றனா். இதையடுத்து, இன்னிசைச் சுழலும் சொல்லரங்கம் எல். வாசுகி மனோகரன் நடத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT