சேலம்

ஆட்டையாம்பட்டியில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்

DIN

வீரபாண்டி வட்டாரம், ஆட்டையாம்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவ துறை சாா்பில் சொட்டு மருந்து புகட்டும் முகாமை வீரபாண்டி எம்எல்ஏ பி. மனோன்மணி துவக்கி வைத்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். வருதராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வீரபாண்டி வட்டாரத்தில் 176 மையங்களில் 15,919 குழந்தைகளுக்கு சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன. இதில், 600 மருத்துவ, ஊட்டச்சத்து பணியாளா்கள் சொட்டு மருந்து அளித்தனா். சொட்டு மருந்து 20, 21-ஆம் தேதிகளில் விடுபட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் என மருத்துவ அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT