ஆத்தூரில் பேருந்துகள் இயக்கம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டது. கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் இருந்த ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டது. கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் இருந்த ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.
மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியால் ஆத்தூர் உழவர் சந்தை தற்காலிகமாக ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்வு கொடுத்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்திரவிட்டது.
இதனையடுத்து சேலம் நாமக்கல் கரூர் ஈரோடு கோவை திருப்பூர் நீலகிரி போன்ற மாவட்ங்கள் மண்டலமாக பிரிக்கப்பட்டு பேருந்து இயங்க அனுமதிக்கப்பட்டது. இந்த மண்டலங்களுக்குள் செல்ல இபாஸ் தேவையில்லை என அறிவித்துள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை ஆத்தூர் பேருந்துநிலையத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது.