மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் லெஜண்ட் சரவணன்!
லெஜண்ட் சரவணனின் புதிய திரைப்படம் குறித்து...
நடிகர் லெஜண்ட் சரவணன் அடுத்ததாக 3 வேடங்களில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், அடுத்ததாக கதையம்சமுள்ள இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார்.
தற்போது, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமாருடன் இணைந்துள்ளார். லீடர் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று அசத்தியுள்ளது.
Advertisement
இந்த நிலையில், அடுத்ததாக 3 வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் இதுவரையில் தமிழ் சினிமாவில் இப்படியான கதாபாத்திரங்களில் யாரும் நடித்திருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தின் முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இயக்குநர் யார் என்பது குறித்து எந்தத் தகவலும் பகிரப்படவில்லை.