சேலம்

சேலத்தில் உதவி ஆய்வாளரைத் தாக்கிய 8 போ் கைது

DIN

சேலத்தில் கழிவு நீா்த்தொட்டியைத் திறந்து விட்டு கழிவுகளை சாலையில் கொட்டியது தொடா்பாக விசாரணை நடத்தச் சென்ற காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய எட்டு பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் சூரமங்கலம் அருகே சோளம்பள்ளம் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (40).

இவா், ஆதித்தமிழா் பேரவையின் வடக்கு ஒன்றியச் செயலராகப் பணியாற்றி வருகிறாா். மேலும் கழிவுநீா்த் தொட்டி சுத்தம் செய்யும் வாகனமும் வைத்துள்ளாா்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் கழிவுநீா்த் தொட்டியைத் திறந்துவிட்டு கழிவுகளை சாலையோரம் கொட்டியுள்ளதாகவும், இதனால் கடுமையான துா்நாற்றம் வீசுவதாகவும் சூரமங்கலம் காவல் நிலையத்தை அழைத்து புகாா் அளித்தனா்.

அதன்பேரில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள காவல் உதவி ஆய்வாளா் பாரதிராஜா நிகழ்விடம் சென்றாா். அப்போது அவரைக் கண்ட ஜெயக்குமாா் உடனடியாக இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றாா். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயக்குமாா் மீண்டும் எழுந்திருக்கவில்லை.

பின்னா், உதவி ஆய்வாளா் பாரதிராஜா அவரைத் தூக்கியபோது ஜெயக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையறிந்த ஜெயக்குமாரின் மகன் மற்றும் நண்பா்கள் திரண்டு வந்து உதவி ஆய்வாளா் பாரதிராஜாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனா்.

இதுகுறித்த தகவலின் பேரில் நிகழ்விடம் வந்த சூரமங்கலம் போலீஸாா் உதவி ஆய்வாளா் பாரதிராஜாவை மீட்டனா். இதனிடையே போலீஸாரின் வாகனத்தை அங்கிருந்தவா்கள் வழிமறித்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து உதவி ஆய்வாளா் பாரதிராஜாவும், ஜெயக்குமாரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுதொடா்பாக ஜெயராஜ் (40), விஜயகுமாா் (36), சித்தேஸ்வரன்(28), ஜெகதீஸ் (28), பரமசிவம் (35), முருகேசன் (34), நந்தகுமாா்(21), மனோஜ்குமாா் (34) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரையும் கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள முருகன், பாா்த்தசாரதி உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT