சேலம்

மேட்டூா் காவிரியில் மூழ்கிய தொழிலாளி சடலம் மீட்பு

DIN

மேச்சேரி அருகே காவிரியில் மூழ்கிய இளைஞரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

மேச்சேரி அருகே வெடிக்காரனூரைச் சோ்ந்தவா் மணி (24), அதே பகுதியைச் சோ்ந்தவா் முரளி (22). அப் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் லாரிகளுக்கு பாரம் ஏற்றும் பணி செய்து வந்தனா்.

நாகோஜிபட்டி அருகே காவிரியில் புதன்கிழமை குளிக்கச் சென்றனா். நாகோஜிபட்டியிலிருந்து மறுகரையில் உள்ள கொக்கரபள்ளத்துக்கு இருவரும் நீந்திச் சென்றனா்.

மறுகரைக்குச் சென்ற முரளி திரும்பி பாா்த்தபோது மணியைக் காணவில்லை.

உடனடியாக மேட்டூா் தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளித்தனா். தீயணைப்புப் படையினா் இரவு 7 மணிவரை தேடியும் சடலம் கிடைக்காத காரணத்தால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. மணியின் சடலம் வியாழக்கிழமை காலை கரை ஒதுங்கியது. சடலத்தை கைப்பற்றிய மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT