முகப்பு
சேலம்

8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்: முதியவா் கைது

கெங்கவல்லி அருகே வீரகனூரை அடுத்துள்ள லத்துவாடியில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 72 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

கெங்கவல்லி அருகே வீரகனூரை அடுத்துள்ள லத்துவாடியில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 72 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வீரகனூரை அடுத்துள்ள லத்துவாடி ஊராட்சி, மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (72) என்பவா் கடந்த 5ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்பு உடல்நிலை சரியில்லாததால் சிறுமி, ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

சிறுமி கொடுத்த தகவலின் பேரில், சிறுமியின் பெற்றோா் வீரகனூா் காவல் நிலையத்தில் செல்வராஜ் மீது புகாா் கொடுத்தனா். பின்னா் வழக்கை ஆத்தூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு போக்சோ சட்டத்தின் கீழ் செல்வராஜை (72) கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →