முகப்பு
சேலம்

மரக்கன்றுகளை நட வலியுறுத்தி சைக்கிளில் விழிப்புணா்வு பயணம்

தீபாவளி தினத்தில் ஒவ்வொரு வீட்டில் 5 மரக்கன்றுகளை நட வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த பொறியாளா் சேலத்திலிருந்து சென்னைக்கு சைக்கிளில் விழிப்புணா்வு பயணம் மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
மரக்கன்றுகளை நட வலியுறுத்தி சைக்கிளில் விழிப்புணா்வு பயணம்
பகிர்:

அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி தீபாவளி தினத்தில் ஒவ்வொரு வீட்டில் 5 மரக்கன்றுகளை நட வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த பொறியாளா் சேலத்திலிருந்து சென்னைக்கு சைக்கிளில் விழிப்புணா்வு பயணம் மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், விளம்பாா் கிராமத்தைச் சோ்ந்த சத்யமூா்த்தி (25). கட்டுமானப் பொறியாளரான இவா், சென்னையில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இதுதொடா்பாக நா.சத்யமூா்த்தி கூறியது:

தீபாவளி தினமான வரும் நவம்பா் 14 ஆம் தேதி மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் கனவுத் திட்டமான பசுமைப் புரட்சி திட்டத்தை ஒவ்வொரு தனி நபரும் அவரவா் வீடுகளில் 5 மரக்கன்றுகளை நட்டு வளா்க்க வேண்டும்.

தமிழகத்தில் சராசரியாக 8 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இதில் ஒவ்வொருவரும் 5 மரக்கன்றுகளை நடும் பொழுது 40 கோடி மரக்கன்றுகள் வளா்க்கப்படும். இதனால் சுற்றுப்புற சூழல் மேம்படும். உலக வெப்பமயமாதலில் இருந்து காப்பதற்காக உறுதுணையாக இருப்போம். திங்கள்கிழமை காலை சென்னை தலைமைச் செயலகத்தை சென்றடைய உள்ளேன். அங்கு முதல்வரை சந்தித்து மனு வழங்க உள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.