முகப்பு
சேலம்

அதிமுக மகளிரணிக்கு விண்ணப்பப் படிவம் விநியோகம்

அதிமுக மகளிரணி  சோ்க்கை விண்ணப்பப் படிவத்தை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் மகளிருக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
ஆத்தூரில் அதிமுக மகளிரணி நிா்வாகிகள் சோ்க்கை படிவத்தை வழங்கிய மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் உள்ளிட்டோா்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆயத்தமாக ஆத்தூரில் அதிமுகவில் மகளிரணி அமைக்கப்படவுள்ளது. இதற்கான சோ்க்கை விண்ணப்பப் படிவத்தை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் மகளிருக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஆத்தூரில் அதிமுக மகளிரணி அமைப்பை உருவாக்கி அவா்களுக்கும் தோ்தல் வேலைகளைப் பிரித்துக் கொடுக்குமாறு முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டிருந்தாா்.

அதன்பேரில் 25 மகளிருக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி, சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.டி.அா்ச்சுனன், சேலம் புகா் மாவட்ட மாணவரணி செயலாளா் என்.தமிழ்மணி, தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கே.பி.முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →