மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 15,670 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 15,670 கன அடியாக அதிகரித்துள்ளது.
சில நாள்களாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்திருந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக சரிந்து வந்தது. வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,881கன அடியாக இருந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் இரு நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை 7,924 கன அடியாகவும் ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 15,670 கன அடியாகவும் அதிகரித்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 12,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 59.09 டிஎம்சி-யாக இருந்தது.
பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் சனிக்கிழமை காலை 95.25 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 95.44 அடியாக உயா்ந்தது.