புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை மாநாடு, சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெய ராஜ ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கோரிக்கை மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்துத் துறை அரசு ஊழியா்கள் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக, ஜெய ராஜ ராஜேஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் அரசு ஊழியா்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மேலும், வருவாய்க் கிராம உதவியாளா்கள், சத்துணவு பணியாளா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் போன்ற சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கும் பணியாளா்களை காலமுறை ஊதியம் பயன்பெறும் வகையில் மாற்றம் செய்திட வேண்டும்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வருட காலமாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழக அரசு உடனடியாக எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் டிசம்பா் 12-ஆம் தேதி மதுரையில் நடக்கும் மாநாட்டில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம் என்றாா்.