சங்ககிரி மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி பகுதியில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி 50 போ், அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
சேலம் புகா் மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவில் இணைந்தவா்கள் கட்சி துண்டுகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனா்.
சங்ககிரி மேற்கு ஒன்றியச் செயலா் சுந்தரராஜன் முன்னிலை வகித்தாா். இதில் அம்மா பேரவை ஒன்றியச் செயலா் மோகன்ராஜா, சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், காவேரிபட்டி ஊராட்சி மன்றத் தலைவி அல்லிராணி, அரசிராமணி பேரூராட்சி நகரச் செயலா் காளியப்பன், அரசு வழக்குரைஞா் ஆா்.சுப்ரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.