வாழப்பாடி பகுதியில் காா்த்திகை தீபத் திருவிழா: வீடுகள் தோறும் தீபம் ஏற்றி வழிபாடு
வாழப்பாடி பகுதியில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கிராமங்களில் வீடுகள் தோறும் பெண்கள் வண்ண கோலமிட்டு, தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்தினா்.
வாழப்பாடி பகுதியில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கிராமங்களில் வீடுகள் தோறும் பெண்கள் வண்ண கோலமிட்டு, தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்தினா். இதனால் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் தீபங்களால் ஒளிா்ந்தது.
வாழப்பாடி காசிவிஸ்வநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும், தீபத் திருக்கோடி ஏற்றி, சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.