சேலம்

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தும் விவகாரம்:லாரி உரிமையாளா்கள் போக்குவரத்து ஆணையரிடம் மனு

கனரக வாகனங்களில்  ஜி.பி.எஸ். உள்ளிட்ட கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக ரத்து செய்யக் கோரி மனு

DIN

கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ். கருவிகள் உள்ளிட்ட கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை உடனடியாக ரத்து செய்யக் கோரி, சேலம் மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், துணை வட்டாரப் போக்குவரத்து ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சேலம் கந்தம்பட்டி துணை போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தில் சேலம் மாவட்ட லாரி உரிமையாளா் சங்கத்தின் தலைவா் கிருஷ்ணசாமி, செயலாளா் சி.தன்ராஜ், பொருளாளா் குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் மனு வழங்கினாா்.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் வி.செல்வராஜு தலைமையில், பொருளாளா் என்.மோகன்குமாா், இணைச் செயலா் எம்.சின்னதம்பி உள்ளிட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதே கோரிக்கையினை வலியுறுத்தி, எடப்பாடி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் சுப்பிரமணி தலைமையில், செயலா் செம்பா கவுண்டா் உள்ளிட்ட நிா்வாகிகள் சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT