முகப்பு
சேலம்

நங்கவள்ளி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் போராட்டம்

நங்கவள்ளி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
நங்கவள்ளி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
பகிர்:

நங்கவள்ளி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ளது நங்கவள்ளி, வனவாசி அரசு மருத்துவமனைகள். தமிழக முதல்வரின் தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் இந்த மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டும் அவர்கள் பணிக்கு வருவதில்லை. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியம் காரணமாக பிறககும் சிசுக்கள் இறந்து போவதுடன் கற்பினிகளும் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். 

இதனை கண்டித்து இன்று பகல் 11 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் பழ.ஜீவானந்தம் தலைமையில் திடீரென நங்கவள்ளி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவ அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. கோரிக்கை மணுவை மருத்துவ அலுவலரிடம் பழ.ஜீவானந்தம் வழங்கினார். 

போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் மீண்டும் மருத்துவர்கள் அலட்சியமகா நடந்துகொண்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →