முகப்பு
தமிழ்நாடு

திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...

Updated On : 19 மார்ச், 2026 at 4:46 AM
முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

உகாதி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் பேசும் மக்கள் இன்று உகாதி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டிருக்கும் பதிவில்,

“தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்!

மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் வெல்வோம் ஒன்றாக!

இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! திராவிட மாடல் 2.0 அமையட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்டோரும் உகாதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

summary

Dravidian brothers and sisters! Chief Minister Stalin wishes Ugadi!

முழு கட்டுரையைப் படிக்க →