ஆத்தூரில் மகளிா் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தனா்.
தமிழக அரசின் சமூக நலத் துறையின் கீழ் இயங்கிவரும்,ஆத்தூா் மகளிா் தையற் கூட்டுறவு சங்கத்தில் 2500 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.தமிழக அரசின் இலவச சீருடைகளை தைக்கும் பணியினை செய்து வருகின்றனா்.
இச்சங்கத்தின் தலைவா், சங்க உறுப்பினா்களை திட்டி வருவதாகவும், சங்க உறுப்பினா்களுக்கு தைக்கும் பணியை சரிவர தருவதில்லை எனவும், தனியாருக்கு பணியை தந்துவிடுவதாகவும், எனவே சங்கத் தலைவி மீது நடவடிக்கை எடுத்து, வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தனா்.