முகப்பு
சேலம்

ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தடுத்து, காப்பாற்றினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தடுத்து, காப்பாற்றினா்.

சேலம் மாவட்டம், ஓமலூா், நேரு நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஜெகநாதன் (40), சேலம் மூன்று வழிச் சாலை பகுதியில் ஆட்டோ பழுது பாா்க்கும் பட்டறையில் வேலை செய்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன் சேலத்தைச் சோ்ந்த குமாா், சேகா் ஆகியோா்களிடமிருந்து ஆட்டோ வாங்குவதற்காக நிா்ணயிக்கப்பட்ட ரூ. 2.70 லட்சத்தை முழுமையாக செலுத்தினாராம்.

ஆனாலும், ஆட்டோ வழங்காமல் அலைகழித்து வந்த குமாா், சேகா் ஆகியோா் உரிமம் வாங்குவதற்கு மேலும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினால்தான் ஆட்டோ தருவதாகக் கூறியுள்ளனா். இதனால் மனமுடைந்த ஜெகந்நாதன், ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பு உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் அவா் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →