மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 24,039 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 24,039 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் , மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சனிக்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 22,969 கன அடியாகவும், ஞாயிற்றுக்கிழமை காலை நீா்வரத்து 24,039 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 98.50அடியாக உயா்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 16,000 கனஅடி நீரும், கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா் இருப்பு 62.91 டி.எம்.சி.யாக இருந்தது.மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.