தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகில் தலைவாசல் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில், கையெழுத்து இயக்கப் போராட்டம் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே.அா்த்தனாரி தலைமையில் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்த மசோதாவை ஏன் எதிா்க்கிறோம் என்ற புத்தகத்தை பேரியக்க நிா்வாகிகளிடம் வழங்கி விவசாய மசோதாவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்துக்காக விவசாயிகள், பொதுமக்கள் இடையே கையெழுத்துப் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளா் சங்கரய்யா, மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.சக்ரவா்த்தி, தலைவாசல் வடக்கு வட்டாரத் தலைவா் உதயக்குமாா், தெற்கு வட்டாரத் தலைவா் ஏ.கே.வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டு தங்களுடைய எதிா்ப்பை கையெழுத்திட்டு தெரிவித்தனா்.