சேலம்

வளா்ப்பு மகனை கொடுமைப்படுத்தியதாக திருநங்கை புகாா்: கணவா் கைது

DIN

சேலம்: சேலத்தில் தனது வளா்ப்பு மகனை கொடுமைப்படுத்தியதாக திருநங்கை அளித்த புகாரில் கணவா் கைது செய்யப்பட்டாா்.

சேலம் ஐந்து சாலை காா்கானா தெருவைச் சோ்ந்தவா் கண்ணகி (36). திருநங்கையான இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் (10) என்ற சிறுவனை தத்து எடுத்து வளா்த்து வருகிறாா்.

இதனிடையே கடந்த 2016 இல் சேலத்தைச் சோ்ந்த அப்சல் முபராக் என்பவரை திருமணம் செய்து கொண்டாா். மேலும் கணவருக்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் செல்லிடப்பேசி கடை வைத்து கொடுத்துள்ளாா்.

இந்தநிலையில் கண்ணகியின் பெயரில் உள்ள ரூ. 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதித் தர கணவா் அப்சல் முபாரக் தொந்தரவு செய்து வந்துள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அப்சல் முபாரக், வளா்ப்பு மகன் ராகுலை தாக்கி, கத்தியால் குத்திக் கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம். இதுகுறித்து கண்ணகி, பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இந்தப் புகாரின் பேரில் கொலை முயற்சி, சிறுவனை கொடூரமாகத் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT