சேலம்

காவலா் தற்கொலை

DIN

மதுரை அருகே குடும்பத் தகராறு காரணமாக காவலா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே குலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (33). இவா் விருதுநகா் மாவட்டம் நரிக்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி இளமதி (27). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், ராஜேஷ் கண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவா், அக். 13 ஆம் தேதி விஷமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT