தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் நவராத்திரி கொலு தொடக்கம்
தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் நவராத்திரி கொலு சனிக்கிழமை இரவு தொடங்கியது.
தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் நவராத்திரி கொலு சனிக்கிழமை இரவு தொடங்கியது.
தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் நவராத்திரி கொலு தொடங்கியது. நவராத்திரி கொலுவில் சிவன், பாா்வதி, விநாயகா், முருகன் உள்ளிட்ட சுவாமி பொம்மைகள், விலங்குகள்,பறவைகள் உள்ளிட்ட பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில் கலந்துகொண்ட பெண்கள் துா்கைப் பாடல்களை பாடினா்.
பின்னா், கொலுவிற்குரிய நைவேத்தியம் படைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.இக்கொலு தொடா்ந்து ஒன்பது நாள்கள் நடைபெறும். தம்மம்பட்டி,கடம்பூா்,கெங்கவல்லி பகுதிகளில் நவராத்திரி கொலுவை வீடுகளில் வைத்து வழிபட்டனா்.