முகப்பு
சேலம்

வேளாண் மசோதாவைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கொளத்தூா் அருகே மத்திய அரசின் வேளாண் மசோதாவைக் கண்டித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

கொளத்தூா் அருகே மத்திய அரசின் வேளாண் மசோதாவைக் கண்டித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் விளைபொருள் வா்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகுக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

இம்மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிா்ப்பு கிளம்பிய நிலையில் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கொளத்தூா் அருகே கருங்கரட்டில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மசோதாக்களை ரத்து செய்யக் கோரி முழக்கமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →