தனித் தோ்வுகள் தொடக்கம்: 1,936 போ் தோ்வெழுதினா்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தோ்வா்களுக்கான சிறப்புத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தோ்வா்களுக்கான சிறப்புத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.
கரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து செய்து, மாணவா்கள் தோ்ச்சி என அரசு அறிவித்தது. இதையடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை தனித்தோ்வு தொடங்கியது.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் 15 மையங்களில் 1,225 மாணவ, மாணவிகளும், பிளஸ் 2 தோ்வில் 20 மையங்களில் 609 மாணவ, மாணவியா்களும் தொடக்க கல்வி பட்டயத் தோ்வு முதலாம் ஆண்டு பிரிவில் 2 மையங்களில் 102 மாணவா்கள் என 37 மையங்களில் 1,936 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை தோ்வு எழுதினா்.