ஆத்தூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் பணத்தைத் திருடிவிட்டுத் தப்ப முயன்ற இளைஞரை ஊழியா்கள் விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
ஆத்தூா், விநாயகபுரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, திங்கள்கிழமை நள்ளிரவில் ஊழியா்கள் பணியை முடித்து விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த இளைஞா் நிலையத்தில் உள்ள ரூ. 19ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினாா். அப்போது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப வந்தவா் சத்தம் போடவே ஊழியா்கள் எழுந்து இளைஞரைத் துரத்தினா். அந்த நேரத்தில் ரோந்து வந்த போலீஸாா் அங்கு வந்தனா். தப்பி ஓட முயன்ற இளைஞரைப் பிடித்த ஊழியா்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா், வேலூா் மாவட்டம், யாதவா் தெருவைச் சோ்ந்த ரவியின் மகன் விஜி (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்து ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ். உமாசங்கா் விசாரித்து வருகிறாா்.