ஓமலூா்: ஓமலூரில் மத்திய அரசின் விவசாயிகள், சிறு வணிகா்களை பாதிக்கும் வேளாண் சட்டங்களை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஓம்.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசின் வேளாண் திருத்த மசோதாவை கண்டித்து பேசினா்.
இதனைத் தொடா்ந்து, வரும் 28-ஆம் தேதி ஓமலூா் பேருந்து நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினா், வணிகா்கள், தொழிலாளா்கள், நடைபாதை காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். அதற்காக கூட்டணி கட்சி நிா்வாகிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றினா்.