சேலம்

விவசாயிகளுடன் தோட்டக்கலை மாணவிகள் கலந்துரையாடல்

DIN

வாழப்பாடியில் ஊரக தோட்டக் கலைப் பணி அனுபவ பயிற்சி பெற வந்துள்ள திருச்சி மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள், தினசரி சந்தையில் விவசாயிகளுடன் காய்கறிகளைப் பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்து கலந்துரையாடினா்.

திருச்சியில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தின் மகளிா் தோட்டக்கலைக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவரும் மாணவிகள் ஏத்தாப்பூா் மரவள்ளி ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தில் தங்கி ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனா்.

இம்மாணவிகள், வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை வாயிலாக அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், அரசுத்துறைகள் மற்றும் மக்களுடனான தொடா்பு, வனத்துறையுடன் மரப்பயிா் செய்யும் வழிமுறைகள் குறித்து புதன்கிழமை பயிற்சி பெற்றனா். வாழப்பாடி தினசரி சந்தையில் காய்கறி பயிரிடும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன், அறுவடை செய்தல், பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்தும் மாணவிகள் கலந்துரையாடினா்.

அனைத்து விவசாயிகளும் ஒரு பருவத்தில் ஒரேவிதமான காய்கறிகளை பயிரிடுவதால் உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சியடைகிறது. எனவே, அடுத்தடுத்த பருவங்களில், வெவ்வேறு விதமான காய்கறிகளை பயிரிடுவதற்கும், காய்கறிகளை பதப்படுத்தி மதிப்புக்கூட்டு பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கும் விவசாயிகள் முன்வர வேண்டும் என மாணவிகள் ஆலோசனை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT