முகப்பு
சேலம்

சங்ககிரி வாரச்சந்தை 2ஆவது முறையாக மூடல்

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள பேரூராட்சிக்கு உள்பட்ட வாரச்சந்தை கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள பேரூராட்சிக்கு உள்பட்ட வாரச்சந்தை கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

கடந்த ஆண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து வராச்சந்தைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டு, அக்டோபா் 1-ஆம் தேதி திறக்கப்பட்டன.

இந்த நிலையில் சங்ககிரி நகா் பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் 2ஆவது முறையாக வாரச்சந்தை மூடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென பேரூராட்சி சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.