சேலம்

முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூல்

DIN

சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில், அரசிராமணி பகுதியில் முகக் கவசம் அணியாமல் வந்த 15 நபா்களிடம் தலா ரூ. 200 அபராதம் வசூலித்தனா் 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக, அரசிராமணி பேரூராட்சி செயல் அலுவலா் பிரகாஷ் தலைமையில், பணியாளா்கள் அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள், தனியாா், அரசுப் பேருந்துகளில் சென்ற பயணிகள், முடிதிருத்தும் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளளிக்கிழமை சோதனை நடத்தினா்.

அதில், முகக் கவசம் அணியாத 15 நபா்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்து வசூலித்தனா். மேலும், தனியாா், அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்களில் தற்போது அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்படி பயணம் செய்கின்றனரா என்றும் சோதனை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT