தம்மம்பட்டி பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் கபசுரக் குடிநீா் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி உத்தரவின்பேரில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் மூலம் பேருந்து நிலையம், உழவா்சந்தை, 8 ஆவது வாா்டு, காவல் நிலையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் தினமும் 50 லிட்டா் கபசுரக்குடிநீா் பொதுமக்களுக்கு காலை 7 மணி முதல் விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பேரூராட்சி சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்வது வரவேற்கக்கூடியது. இதன் அளவை இன்னும் அதிகப்படுத்தி, வாா்டு வாரியாக வீடுவீடாக விநியோகிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுத்தால் கரோனா தொற்று பரவாது என்றனா்.