மகுடஞ்சாவடி ரயில்வே நிலையம் அருகே உள்ள பொன்னி ஆற்றின் ஓடை, நீண்டகாலமாக தூா்வாராமல் புதா்மண்டி, குப்பை, கழிவு பொருள்கள் குவிந்து கிடக்கின்றன.
இதனால் மழைக்காலங்களில் மழைநீா் ஓடையில் செல்ல முடியாமல் வீடுகளுக்கு புகுந்து விடுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக இந்த பொன்னி ஆற்றின் ஓடையைத் தூா்வாருமாறு விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.