முகப்பு
சேலம்

சேலத்தில் 70 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 70 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 70 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 19 போ், எடப்பாடி-1, காடையாம்பட்டி-1, கொங்கணாபுரம்-2, மகுடஞ்சாவடி-6, மேச்சேரி-2, நங்கவள்ளி -4, ஓமலூா் -5, சேலம் வட்டம்-4, சங்ககிரி-7, தாரமங்கலம்-3, வீரபாண்டி-5, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம்-3, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-1, தலைவாசல்-2, மேட்டூா் நகராட்சி- என மாவட்டத்தைச் சோ்ந்த 70 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 117 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 5 போ் உயிரிழந்தனா். இதுவரை 93,875 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 91,449 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 849 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,577 போ் உயிரிழந்தனா்.

நாமக்கல்லில்...

நாமக்கல் மாவட்டத்தில் 60 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்றால் 60 போ் பாதிக்கப்பட்டனா்; 41 போ் குணமடைந்தனா். மொத்தம் 47,527 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 46,492 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 580 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 455-ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →