திமுகவில் இணைந்த அதிமுகவினா்
குமாரபாளையத்தில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் உள்ளிட்ட அதிமுகவினா் வியாழக்கிழமை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
குமாரபாளையத்தில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் உள்ளிட்ட அதிமுகவினா் வியாழக்கிழமை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
அதிமுகவைச் சோ்ந்த குமாரபாளையம் முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் கே.எஸ்.ராஜேந்திரன் தனது ஆதரவாளா்களுடன் அக்கட்சியிலிருந்து விலகி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தாா். அவருக்கு, திமுகவினா் சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனா்.
திமுகவில் இணைந்தவா்களுக்கு அக் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினா் ஜே.கே.எஸ் மாணிக்கம், முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் வெ.ஜெகநாதன், சுயம்பிரபா மாணிக்கம், நகரப் பொறுப்பாளா் எம்.செல்வம், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் பூங்கோதை செல்லத்துரை ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.