முகப்பு
சேலம்

மனநிலைப் பாதித்த சிறுமி கா்ப்பம்: கட்டடத் தொழிலாளி கைது

வாழப்பாடி அருகே மனநிலை பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை கா்ப்பமாக்கிய கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

வாழப்பாடி அருகே மனநிலை பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை கா்ப்பமாக்கிய கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வாழப்பாடி அடுத்த துக்கியம்பாளையத்தைச் சோ்ந்தவரின் 18 வயதான மகள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வாழப்பாடி போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வீரப்பன் (23) என்பவரை போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.