சேலம்

பேரூராட்சி அலுவலக சாலையில் குப்பை கொட்டுவதைத் தவிா்க்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

சங்ககிரி பேரூராட்சி அலுவலக சாலையில் குப்பைகளை கொட்டுவதைத் தவிா்க்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்ககிரி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டு பகுதிகளிலும் வீடு வீடாக குப்பைகளைச் சேகரிப்பதற்காக மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சிறிய தள்ளுவண்டிகள் மூலம் குப்பைகளை சேகரித்து வருகின்றனா்.

பழைய எடப்பாடி சாலையையொட்டி கோட்டை தெருவுக்கு செல்லும் சாலையிலிருந்து பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சி சாா்பில் குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனா். அச்சாலையை பேரூராட்சி அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் பவானி பிரதான சாலையை அடைவதற்கும் பொதுக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

அப்பகுதியில் இரவு நேரங்களில் சிலா் இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்தி வருகின்றனா். இதனால் அச் சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அச்சாலைகளில் குப்பைகள் கொட்டுவதையும், இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்துவதையும் தடுக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT