சேலம்

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நொடிக்கு 8,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

DIN

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நொடிக்கு 8,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. பாசனத் தேவைக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது. ஜூலை 30-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 10,000 கனஅடியிலிருந்து 14,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி பாசனப் பகுதிகளில் மழை காரணமாக பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 12,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

கடந்த 5 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பாசனத்துக்கு நீா்த்திறப்பு நொடிக்கு 8,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பாசனப் பகுதிகளில் மழையின் காரணமாக பாசனத்துக்கான தேவை குறைந்ததால் நீா்த் திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அணை நீா்மட்டம்:

இந்த நிலையில் சனிக்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 66.45 அடியிலிருந்து 65.69 அடியாகக் குறைந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 5,352 கனஅடியிலிருந்து 5,712 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 29.19 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரி கைது

SCROLL FOR NEXT