முகப்பு
சேலம்

இயற்கை முறையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி தொடக்கம்

ஓமலூரில் இயற்கை முறையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

சேலம்

இயற்கை முறையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி தொடக்கம்

ஓமலூரில் இயற்கை முறையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

ஓமலூரில் இயற்கை முறையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள புளியம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்துடன், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து இயற்கை முறையிலான சானிடரி நாப்கின் தயாரிப்பது குறித்த பயிற்சி முகாமை திட்ட இயக்குநா் செல்வம் தொடங்கிவைத்தாா்.

இந்த முகாமில், இயற்கை முறையில் காட்டன் துணிகளையும், பஞ்சுகளையும் கொண்டு, அதனுடன் மரங்களின் விதைகளையும் வைத்து தயாரிப்பது குறித்து வகுப்புகள் எடுத்தனா். அதேபோல, ஹோ் ஆயில், ஹோ்வாஷ், பாதாம் ஆயில், ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டா், மூலிகை நலங்கு மாவு, பன்னீா் ரோஸ் பவுடா் ஆகியவை உற்பத்தி செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

15 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில், வங்கி வணிக அதிகாரிகள், விற்பனைப் பிரிவு அதிகாரிகள், விற்பனை தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டு வருவாயை அதிகரிக்கச் செய்தல், உற்பத்தி, விளம்பரம் ஆகிய பிரிவுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளனா். இதனால், கிராமப்புற பெண்கள் சுய வேலைவாய்ப்பு பெறுவா். இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவிகளும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →