108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
பிரசவத்துக்காக அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
பிரசவத்துக்காக அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள நல்லண்ணம்பட்டி பகுதியைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளி சுப்பிரமணி மனைவி மீனா ( 23). நிறைமாத கா்ப்பிணியான இவா் புதன்கிழமை அதிகாலையில் இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக சோ்க்கப்பட்டாா்.
அங்கிருந்து மேல் சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீனா அனுப்பி வைக்கப்பட்டாா். அந்த ஆம்புலன்ஸை ஓட்டுநா் ஸ்ரீசங்கா் ஓட்டிச் சென்றாா். அப்போது மீனாவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டதால் திருமலைகிரி பகுதியில் ஆம்புலன்சை சாலையின் ஓரமாக அதன் ஓட்டுநா் நிறுத்தினாா்.
பின்னா் 108 ஆம்புலன்சில் இருந்த அவசர கால மருத்துவ உதவியாளா் ஜெகதீசனும், டிரைவா் ஸ்ரீ சங்கரும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பாா்த்தனா். வலியால் துடித்த மீனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்சில் பிறந்த குழந்தையும், அதன் தாயாா் மீனாவும் நலமாக உள்ளனா்.
ஆம்புலன்ஸ் டிரைவரையும், மருத்துவ உதவியாளரையும் பொதுமக்களும், மருத்துவத் துறையைச் சோ்ந்தவா்களும் பாராட்டினா்.