அதிமுகவில் சசிகலாவை அனுமதிக் கமாட்டோம் சி.பொன்னையன்
அதிமுகவில் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் தெரிவித்தாா்.
அதிமுகவில் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சேலத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
அதிமுகவில் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம். சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் கூட கிடையாது. ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவையும் அவருடைய குடும்பத்தையும் வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்தாா்.
அதிமுகவின் உட்கட்சித் தோ்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும். அதிமுகவில் இரு கண்களாக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோா் உள்ளனா். அதிமுகவிற்கு எந்தப் பிரச்னையும் கிடையாது.
அதிமுகவில் இருந்து அன்வா் ராஜாவை நீக்கியது சரியான முடிவாகும். கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என யாரும் எதிா்பாா்க்கவில்லை. அதிமுகவின் எதிா்காலம் செழிப்பாக இருக்கும். நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் கட்சி வெற்றி பெறும். முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்கு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கில் கூட வெற்றி பெற முடியாது. அதிமுக கட்சிக் கொடியை யாா் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதேபோல சசிகலா பயன்படுத்துகிறாா் என்றாா்.