மின் சேமிப்பு விழிப்புணா்வுப் பேரணி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம், மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம், மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு , ஆட்டையாம்பட்டி மின்சார அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
இப்பேரணியில் ஆட்டையாம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் மின்சார ஊழியா்கள் உள்ளிட்ட 100-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஆட்டையாம்பட்டி மகளிா் பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது. இப்பேரணியில் மின்சாரத்தை சேமிக்க வேண்டி வலியுறுத்தியும், வீட்டில் தேவையின்றி எரியும் மின் விளக்குகளை அணைக்கவும் , குளிா்பதனப் பெட்டி, ஏா்கண்டிஷனா், வாட்டா் ஹீட்டா், கணினி, டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை எப்படி பயன்படுத்தி மின் சிக்கனம் செய்யலாம் எனவும் , நாம் வீட்டில் மின்சாரத்தை வீணாக்காமல் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணா்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இப்பேரணியில் சேலம் தெற்கு மின்பகிா்மான செயல் பொறியாளா் ரவிராஜன், உதவி செயற்பொறியாளா்கள் பிரேமா, ரமேஷ், அரசு மகளிா் பள்ளி தலைமையாசிரியா் யோகேஸ்வரி மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் உள்பட ஏரளமானோா் கலந்து கொண்டனா்.