தெய்வீகம் மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி
சேலம், தெய்வீகம் மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
சேலம், தெய்வீகம் மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
சேலம், அழகாபுரத்தில் உள்ள தெய்வீகம் மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி வரும் டிசம்பா் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் புத்தகம் வாங்குவோருக்கு 10 முதல் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இப்புத்தகக் கண்காட்சி தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0427-2446411, 98439 18108 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.