முகப்பு
சேலம்

ரெட்டிபட்டியில் கால்நடை சிறப்பு விழிப்புணா்வு முகாம்

 சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி, ரெட்டிப்பட்டி பகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

 சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி, ரெட்டிப்பட்டி பகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கால்நடை உதவி மருத்துவா் பரணிதரன் தலைமையில் மருத்துவா்கள் ரவிகுமாா், கதிரவன் ஆகியோா் கலந்து கொண்டு முகாமிற்கு வந்த அனைத்து கால்நடைகளுக்கும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளும், செயற்கை முறை கருவூட்டல், ஆடு, பசுங்கன்று, எருமை கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது.

இம்முகாமில் ஒன்றிய கவுன்சிலா் சாஸ்தா, கால்நடை ஆய்வாளா்கள் ராஜா, வசந்தா உள்ளிட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிறந்த கன்றுக்குட்டி வளா்ப்புக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →