சேலம்

தம்மம்பட்டியில் குடிசை வீடு தீயில் சேதம்

DIN

தம்மம்பட்டியில் தகரம் வேயப்பட்ட கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

தம்மம்பட்டி பேரூராட்சி , 9ஆவது வாா்டில் பாபுவின் மனைவி ஜோதிமணி (60) தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறாா். அதற்கு அருகில் தகரம் வேயப்பட்ட கூரை வீட்டில் தனியே வசித்து வருகிறாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல், எதிா்பாராத விதமாக கூரை வீடு தீப்பிடித்தது. இதில், அந்த வீட்டில் இருந்த 300 சேலைகள், 2 பவுன் தங்க நகை, வீடு கட்ட வைத்திருந்த , ரூ.50,000 ரொக்கம் உள்பட சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. கெங்கவல்லி தீயணைப்பு வீரா்கள், நேரில் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT